உள்ளூர் செய்திகள்

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Published On 2023-08-09 12:33 IST   |   Update On 2023-08-09 12:33:00 IST
  • வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார்.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரிகள் வழக்கறிஞர்கள்சந்திவுரபாண்டி, குரு தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவராக முத்துமணி, துணைத்தலைவர்களாக கார்த்திக்கேயன், தங்கபாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன், துணைச்செயலாளர்களாக சிவராமன், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி, நூலகராக துரைமுருகன், செயற்குழு உறுப்பினர்களாக ராமர், கார்த்திக்குமார், நேதாஜி, வீரமாரி பாண்டியன், நாச்சியார், கோபி, கார்த்திக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீதிபதி வெங்கிடலட்சுமி சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், அரசு வழக்கறிஞர்கள் மோகன்குமார், பார்த்தசாரதி, மகேஷ், மூத்த வழக்கறிஞர்கள் செல்வகுமார், அழகேசன், முத்துராமலிங்கம், வெள்ளைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News