உள்ளூர் செய்திகள்

தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-16 07:19 GMT   |   Update On 2023-09-16 07:19 GMT
  • தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

மேலூர்

மேலூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், உட்கட்சி வேற்றுமையை மறந்து வரும் தேர்தலில் அனை வரும் பொறுப்பாளராக செயல்பட வேண்டும். மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் தங்களுக்குரிய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். செயல்படாத நிர்வாகிகள் கண்காணித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாளபட்டி சேர்மன் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ் சுபைதா அப்பாஸ், தொண்டரணி அமைப்பாளர் வேலாயுதம், இளைஞர் அணி அமைப்பாளர் அழகுபாண்டி, வேலூர் யூனியன் துணை சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ராஜராஜன், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, பழனி வல்லாளப்பட்டி கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைபுகழேந்தி, முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர் அலாவுதீன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News