உள்ளூர் செய்திகள்

வெள்ள தடுப்பு செயல்முறை விளக்கம்

Published On 2022-10-15 07:38 GMT   |   Update On 2022-10-15 07:38 GMT
  • வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.

 வாடிப்பட்டி

வாடிப்பட்டி தனியார் கல்லூரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை வடகிழக்கு பருவமழை பாதிப்பு முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமையிடத்து துணை தாசில்தார் நாகேந்திரன், மண்டலத்துணை தாசில்தார் செந்தில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டியன் கீர்த்தி முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார். தீயணைப்பு நிலைய அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் பேரிடர் காலம், தீ, வெள்ளம் ஏற்படும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி வீரர்கள் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News