உள்ளூர் செய்திகள்

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

Published On 2023-10-27 06:42 GMT   |   Update On 2023-10-27 06:42 GMT
  • திருமங்கலத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
  • நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதவன், சுகாதார அலுவலர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மதுரை மாவட்ட மலேரியா அலுவலர் வரதராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு பவுடர் வழங்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரி மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதனை நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. நிகழ்ச்சியில் செக்கானூரணி வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி, நகராட்சி கவுன்சிலர்கள் சின்னசாமி, வீரக்குமார், ஜஸ்டின் திரவியம், காசி பாண்டி, ரம்ஜான் பேகம் ஜாகீர், சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசீலன், சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News