உள்ளூர் செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-12-19 14:00 IST   |   Update On 2022-12-19 14:00:00 IST
  • உசிலம்பட்டியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
  • இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (20-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை உசிலம்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கலந்து கொள்கிறார்.

எனவே உசிலம்பட்டி மின் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து தீர்வு காணலாம். இத்தகவலை மதுரை மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News