உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஏ.டி.எம். மெக்கானிக் பலி
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஏ.டி.எம். மெக்கானிக் பலியானார்.
- முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
அவனியாபுரம்
மதுரை விளாங்குடியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முத்துக்குமார் (வயது 36). இவர் ஏ.டி.எம். மெக்கானிக்காக பணிபுரிந்தார்.
நேற்று மாலை இவர் அருப்புக்கோட்டையில் வேலையை முடித்துவிட்டு மதுரைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவனியாபுரம் அருகே உள்ள பெருங்குடி அருகே வந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனம் எந்தவித சைகையும் செய்யாமல் திடீரென்று திரும்பியது.
இதனால் முத்துக்குமார் முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த அவனி யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த முத்துக்குமாருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.