உள்ளூர் செய்திகள்
சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை
- மேலவளவு கிராம பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடந்தது.
- சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு காவல் நிலை–யம். இதற்கு உட்பட்ட கிரா–மங்களில் குற்ற சம்பவங் களை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மேல–வளவு போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்க–ளுடன் கலந்தாய்வுக்கூட்டம் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் கும–ரன்,
மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மலைச்சாமி, கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன், சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பிரபு,அ.வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், மேலவளவு சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.