உள்ளூர் செய்திகள்

மதுரையில் உலக யோகா தினத்தையொட்டி நடந்த பேரணியில் பங்கேற்ற பிரம்மாகுமாரிகள் அமைப்பினர்.

பிரம்மா குமாரிகள் பேரணி

Published On 2022-06-20 09:46 GMT   |   Update On 2022-06-20 09:46 GMT
  • மதுரையில் உலக அமைதி வேண்டி பிரம்மா குமாரிகள் அமைப்பினர் பேரணி நடத்தினர்.
  • மதுரையில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை

மதுரையில் இயங்கி வரும் பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தையொட்டி உலக அமைதி மற்றும் சமுதாய முன்னேற்றம் வேண்டி அமைதிப்பேரணி மதுரையில் நடந்தது.

மதுரை ஆயுதப்படை மாரியம்மன் கோவில் வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாநகரக்காவல் தலைமையிட துணை ஆணையர் வனிதா, பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பிரம்மாகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மதுரை நாராயணாபுரம் அருகே உள்ள பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மாவட்ட தலைமையிடமான விஷ்வசாந்தி நகரில் உள்ள விஷ்வசாந்தி பவனில் பேரணி முடிவடைந்தது. இதை தொடர்ந்து தியானம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தன.

Tags:    

Similar News