உள்ளூர் செய்திகள்
- ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து ெகாண்டனர்.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில செயலாளர் சேவுகன் தலைமை தாங்கினார். பெட்ரோல், டீசல் வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு ஒதுக்குவதுபோல் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீடு திட்டத்தில் அரசு முன்னுரிமை அளிக்க ேவண்டும். எப்.சி. கட்டணம், சாலைவரியை குறைக்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.