உள்ளூர் செய்திகள்

அன்னதானம்-தங்கத்தேர் இழுத்து வழிபாடு

Published On 2023-05-11 08:45 GMT   |   Update On 2023-05-11 08:45 GMT
  • மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் அன்னதானம்-தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
  • ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

மதுரை

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 69-வது பிறந்தநாள் விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை யொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மதுரையில் ஜெயலலிதா பேரவை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை பசுமலையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்க ளில் தங்கியுள்ள முதி யோர்கள் மற்றும் ஆதர வற்றோருக்கு ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பா. வெற்றிவேல் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதனை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து மதுரை அழகர் கோவிலில் ஜெய லலிதா பேரவை சார்பில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யில் எடப்பாடி பழனிசாமி நீடூடி வாழ வேண்டி தங்கத்தேர் இழுத்து அ.தி.மு.க.வினர் வழிபாடு செய்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. இதையொட்டி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News