உள்ளூர் செய்திகள்

ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்

Published On 2022-09-13 08:32 GMT   |   Update On 2022-09-13 08:32 GMT
  • மதுரையில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது,.

மதுரை

மதுரை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் பனகல் சாலை திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 'மத்திய அரசின் தொழிலாளருக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தமிழகத்தில் அனைத்து தொழிலாளருக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தை சீராக செயல்படுத்த வேண்டும், மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆட்டோ தொழிலை பாதிக்கும் வாகன சேவைகளுக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொது செயலாளர் நந்தாசிங் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News