உள்ளூர் செய்திகள்

மதுைர கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரம் கையிருப்பு

Published On 2022-10-14 08:43 GMT   |   Update On 2022-10-14 08:43 GMT
  • மதுைர மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவு உரம் கையிருப்பில் உள்ளது.
  • மேற்கண்ட தகவலை இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 13 ஆயிரத்து 777 நபர்களுக்கு ரூ. 110.85 ேகாடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கால்நடை பராமரிப்பு கடன் 6 ஆயிரத்து 163 நபர்களுக்கு ரூ. 26.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 513 டன் கிரிப்கோ யூரியா மற்றும் விஜய் யூரியா 125 டன் அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா ஆயிரத்து 49 டன், டி.ஏ.பி. 372 டன், பொட்டாஷ் 254 டன், காம்ப்ளக்ஸ் 941 டன் என மொத்தம் 2 ஆயிரத்து 616 டன் இருப்பு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான பயிர்க்கடன் மற்றும் உரங்களை பெற்று பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை வேளாண் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News