உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது எடுத்த படம். 

தூய்மைபணி உறுதிமொழி ஏற்பு

Published On 2022-06-08 10:34 GMT   |   Update On 2022-06-08 10:34 GMT
  • தூய்மைபணி விழிப்புணர்வு பிரசாரத்தில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
  • நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பேரூராட்சியில் ''எனது குப்பை, எனது பொறுப்பு'' என்ற தூய்மைபணி விழிப்புணர்வு பிரசாரத்தில் தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.

போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சுகாதாரஆய்வாளர் பொன்.முத்துகுமார் முன்னிலை வகித்தனர்.

செயல் அலுவலர் சண்முகம் வரவேற்றார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, ேபரூராட்சிதுணைத் தலைவர் கார்த்திக், முன்னாள்கவுன்சிலர்செல்வராஜ், பிரகாஷ், திரவியம், இளநிலை உதவியாளர்கள் ஆறுமுகம், கார்த்திக் உள்பட தூய்மைபணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சுகாதாரபணி மேற்பார்வையாளர் திலிபன்சக்ரவர்த்தி நன்றிகூறினார்.

Tags:    

Similar News