உள்ளூர் செய்திகள்

இறந்த மணிகண்டன்

தண்ணீரில் மூழ்கி வாலிபர் சாவு

Published On 2022-09-19 06:38 GMT   |   Update On 2022-09-19 06:38 GMT
  • திருமங்கலம் அருகே தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
  • மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் கப்பலூர் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது39). சிட்கோவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், 5 வயதில் மகளும் உள்ளனர்.

மணிகண்டன் நேற்று காலை வீட்டுக்கு அருகில் உள்ள ஓடைக்கு சென்றார். இந்த நிலையில் ஓடை தண்ணீரில் மூழ்கி மணிகண்டன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News