உள்ளூர் செய்திகள்

வயலில் சுருண்டு விழுந்து இறந்த ராணுவ வீரர்

Published On 2022-10-18 06:49 GMT   |   Update On 2022-10-18 09:47 GMT
  • திருமங்கலம் அருகே வயலில் இறந்த ராணுவ வீரர் சுருண்டு விழுந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி பக்கம் உள்ள கரடிக்கல் புன்னனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுரை வீரன் (வயது40). இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

ராணுவ வீரரான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு ஊரில் உள்ள தன்னுடைய வயலில் விவசாயம் செய்து வந்தார். புன்னனம்பட்டியில் உள்ள தனது வயலில் தற்போது சோளம் விதைத்துள்ளார். நேற்று வயலுக்கு சென்றிருந்த அவர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மதுரை வீரனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஆதிலட்சுமி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News