உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம்

Published On 2023-10-08 07:47 GMT   |   Update On 2023-10-08 07:47 GMT
  • கால்நடை மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
  • விபரீதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.

சோழவந்தான்

சோழவந்தான் கால்நடை மருத்துவமனை கட்டிடம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவ மனையில் சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பசுமாடு, காளை மாடு, ஆடுகள், பூனைகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை சிகிச்சை அழைத்து வரு கின்றனர்.

இங்கு கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய தொற்று நோய் மற்றும் மர்ம நோய்க்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கான தடுப்பூசியும் இங்கு போடப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவ மனையின் கட்டிட முன்பகுதி உட்பட பல பகுதி மேற்கூரை கள் சிமெண்ட் பெயர்ந்து கீழே விழுந்து கம்பி தெரிகிறது.

எந்த நேரம் இந்த மேல் கூரை இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது. இடிந்து விழுந் தால் இங்கு சிகிச்சைக்கு வரக்கூடிய கால்நடைக ளுக்கும், அழைத்து வரக் கூடிய பொதுமக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

விபரீதம் நடக்கும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இடிந்து விழக்கூடிய நிலை யில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டடத்தை கட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News