உள்ளூர் செய்திகள்

ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைது

Published On 2023-04-30 08:46 GMT   |   Update On 2023-04-30 08:46 GMT
  • ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைதனார்கள்.
  • சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது.

மதுரை

மதுரை கே.புதூர் போலீசார் பாலாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது கோல்டன் சிட்டி பின்புற பகுதியில் எருக்கலை நத்தம் சூர்யா (வயது 25), பாலமேடு வெள்ளையம் பட்டி முத்துப்பட்டி தெரு முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22) ஆகிய 2 பேர் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் அண்ணா நகர் எஸ்.எம்.பி. காலனியில் ஆயுதங்களுடன் திரிந்த கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி என்ற ஒயிட் (32), எஸ்.எம்.பி. காலனி சக்திவேல் மகன் ஜோதிகுமார் என்ற எலும்பன் (23) ஆகிய 2 பேர் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் ஆயுதங்களு டன் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இேதபோல் பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே ஆயுதங்களுடன் திரிந்த வண்டியூர் காளி யம்மன் கோவில் தெரு சேதுராமன் மகன் சூரிய பிரகாஷ் என்ற கல்கட்டை (24), முந்திரிதோப்பு, மவு லானா சாகிப் தெரு மணி கண்டன் என்ற உசிலைமணி (34) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீ சார் கைது செய்தனர்.

Tags:    

Similar News