உள்ளூர் செய்திகள்

கைதான 5 பேர்.

ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது

Published On 2023-01-03 09:29 GMT   |   Update On 2023-01-03 09:29 GMT
  • மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது.

மதுரை

மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் 5 பேர் தப்பிச்சென்று விட்டனர்.

பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் பண்ணியான் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 21), திருநகர் நாகராஜ் மகன் ஆகாஷ் (21), சமயநல்லூர் சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர் (20), விக்ரமங்கலம், பெரியார் நகர் முத்தையா மகன் விஜய் (20) வில்லாபுரம், மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சோலார் சரவணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News