உள்ளூர் செய்திகள்

நோய் குணமாகாத விரக்தியில் 2 தொழிலாளர்கள் தற்கொலை

Published On 2022-12-15 08:17 GMT   |   Update On 2022-12-15 08:17 GMT
  • நோய் குணமாகாத விரக்தியில் 2 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை உத்தப்ப நாயக்கனூர் வெள்ளை மலைபட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42).

கூலி தொழிலாளியான இவருக்கு சிறுநீரக கல்லடைப்பு பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரண மாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனை களில் காண்பித்தும்நோய் முற்றிலுமாக குணமாகவில்லை.

எனவே வாழ்க்கை யில் விரக்தி யடைந்த சிவகுமார், உத்தப்பநாயக்கனூர்- மொண்டிக்குண்டு ரோட்டில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை வலையாங்குளம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(50). கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவருக்கு மூட்டு வலி பிரச்சினை இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம், வீட்டின் பின்புறம் உள்ள தகரக்கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News