உள்ளூர் செய்திகள்

சிறுமியை கர்ப்பிணியாக்கியஇளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

Published On 2023-01-21 06:45 GMT   |   Update On 2023-01-21 06:45 GMT
  • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தர உத்தரவு
  • சிறையில் அடைப்பு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .திருமானூர்அடுத்த கரைவெட்டி பரதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் சக்திவேல்(வயது 20). இவர் கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் காதலித்து வந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் 3 மாதம் கர்ப்பிணியான அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், போக்சோ சட்டத்தில் சக்திவேலை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி சக்திவேலுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சக்திவேல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ம.ராஜா ஆஜரானார்.

Tags:    

Similar News