உள்ளூர் செய்திகள்

கண்காட்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியபோது எடுத்தபடம்.

தென்காசியில் எந்திரங்கள்- வர்த்தக கண்காட்சி

Published On 2023-05-07 07:47 GMT   |   Update On 2023-05-07 07:47 GMT
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
  • கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் மெகா எந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி இலஞ்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கலெக்டர்

இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலை குமார் மற்றும் சோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் பவுண்டரான ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கண்காட்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா, நகராட்சி சேர்மன் சாதிர், துணை சேர்மன் கே.என்.எல். சுப்பையா, இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னதாய் மற்றும் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மாரியம்மாள், ஏ.டி., எம்.எஸ்.எம்.இ. தலைவர் சீமியோன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இசக்கிமுத்து, பி.எம். சிட்கோ நிறுவனத்தின் தலைவர் சத்யராஜ், ஆரம் டிக் நிறுவனத்தின் தலைவர் முருகேசன், ஏ.டி. திறன் மேம்பாட்டு மையம் தலைவர் ஜார்ஜ் பிராங்கிளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சிமன்ற தலைமை கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஜே.பி. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரும், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளருமான அய்யப்பன், செந்தில் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News