உள்ளூர் செய்திகள்

வைகை அணை (கோப்பு படம்)

52 அடியாக குறைந்த நீர்மட்டம் வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2023-01-27 05:40 GMT   |   Update On 2023-01-27 05:40 GMT
  • நீர்வரத்தை பொறுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்தும், குறைத்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
  • தற்போது அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக குறைந்து உள்ளது. நேற்று 969 கனஅடிநீர் திறக்கப்பட்டது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி ெபறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட அணையில் முழுகொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டது. அதனைதொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

நீர்வரத்தை பொறுத்து அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்தும், குறைத்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக குறைந்து உள்ளது. நேற்று 969 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்பட்டது. அணைக்கு 948 கனஅடிநீர் வருகிறது.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 129.55 அடியாக உள்ளது. 156 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1133 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.95 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 104.96 அடியாக உள்ளது. வரத்து இல்லை. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News