உள்ளூர் செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி

Published On 2022-09-30 10:22 GMT   |   Update On 2022-09-30 10:22 GMT
  • பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார்.
  • 2 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஆசிர்வாதம், வங்கி மேலாளர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவிபாபநாசம் இந்தியன் வங்கி கிளை சார்பில் 2 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா 9 லட்சம் வீதம் 18 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அனைத்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள், வட்டார இயக்க மேலாளர் சரண்யா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராஜலட்சுமி, கவிதா, சசிகலா, உமாராணி, கீதா, சரஸ்வதி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News