உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் ரூ.38 லட்சம் மதிப்பில் தொழில்முனைவோருக்கு கடன் உதவி

Published On 2023-08-18 09:11 GMT   |   Update On 2023-08-18 09:11 GMT
  • வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
  • ஊராட்சி ஒன்றிய தலைவர் வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் தொழில்முனைவோருக்கான பயிற்சி தொடங்கியது.

இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 6 தொழில் முனைவோருக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டது.

மேலும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.70 ஆயிரம் வரை நுண்தொழில் நிறுவன நிதி கடன் திட்டம் மூலம் 10 பேருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் ராம்குமாா், மாவட்ட திட்ட செயல் அதிகாரி ரமேஷ் கிருஷ்ணன், செயல் அலுவலா்கள் தினேஷ்குமாா், ப்ரீத்தா மற்றும் தொழிற்சாா் வல்லுநா்கள், கோத்தகிரி வட்ட மகளிா் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டாா்.

Tags:    

Similar News