உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதல்; வக்கீல் பலி

Published On 2023-01-16 08:28 GMT   |   Update On 2023-01-16 08:28 GMT
  • பார்வதி நாதன் தூத்துக்குடியில் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
  • லோடு ஆட்டோ பார்வதிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் பார்வதி நாதன்(வயது 25). இவர் நெல்லை சட்டக் கல்லூரியில் படித்து முடித்து தூத்துக்குடியில் ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த பார்வதிநாதனை அவரது அப்பா அய்யப்பன் வீட்டிற்கு சாப்பிட வருமாறு செல்போனில் அழைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்த பார்வதிநாதன் ஸ்பிக்நகர் அத்திமரப்பட்டி சாலையில் வந்தபோது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த பார்வதிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்- இன்ஸ்பெக்டர் சேட்டை நாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News