உள்ளூர் செய்திகள்

உத்திரமேரூரில் மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் எரிந்தன

Published On 2022-10-19 10:30 GMT   |   Update On 2022-10-19 10:30 GMT
  • உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று திடீரென இடி இடித்தது.
  • விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன.

உத்திரமேரூர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சோமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென இடி இடித்தது.

அந்த பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரது வீட்டின் அருகே நின்ற 2 மரங்கள் மின்னல் தாக்கி கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News