உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சிறுத்தை நடமாட்டம்

Published On 2022-06-30 10:24 GMT   |   Update On 2022-06-30 10:24 GMT
  • ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.
  • இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஊட்டி:

தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

சிறுத்தை புகுந்தது நீலகிரி மாவட்டம் ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடாமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றது. குறிப்பாக காட்டெருமை, கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. சாலையில் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தை பார்த்த சிறுத்தை, சாலையோரத்தில் பதுங்கி நின்றது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பிடிக்க வேண்டும் இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலக வளாகத்தில் சிறுத்தை நடமாடியது.

அந்த சிறுத்தை நேற்று முன்தினமும் சாலையில் நடமாடி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் சிறுத்தை எந்த வழியாக அங்கிருந்து சென்றது என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஊட்டியில் உலா வரும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஊட்டியில் கரடி, காட்டெருமைகளை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்து உள்ளது

Tags:    

Similar News