உள்ளூர் செய்திகள்

தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-10-10 08:40 GMT   |   Update On 2023-10-10 08:40 GMT
  • சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் இணையதள குற்றங்கள் பற்றி பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

எஸ். தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி. முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் ஆரிபா தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணையதள குற்றங்கள் பற்றி ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளிடம் எடுத்துக் கூறினர். முன்னதாக தலைமை ஆசிரியர் வரவேற்றார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவிப் பேராசிரியா ஆரிபா நன்றி கூறினார்.

Tags:    

Similar News