உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்களை படத்தில் காணலாம்.

திண்டுக்கல்லில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-18 13:14 IST   |   Update On 2023-08-18 13:14:00 IST
  • எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
  • கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்:

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசா ரணை நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை திருத்தம் செய்வதாக இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்தும் இந்திய பார் கவுன்சிலிடமோ, சட்டத்துறை சார்ந்தவர்களி டமோ எந்த ஆலோசனையும் பெறாமல் எதேச்சதிகாரமாக சட்ட மசோதா தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் நீதிமன்றத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை மாவட்ட நீதி மன்றம் அருகே அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்கத் தலைவர் செந்தில்கு மார், செயலாளர் உதயகு மார், இணைச் செயலாளர் கண்ணன் மற்றும் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். கோர்ட்டு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News