உள்ளூர் செய்திகள்

புதிய வழித்தடத்தில் இருந்து புதியபேருந்து சேவை துவக்கம்

Published On 2023-04-02 17:44 IST   |   Update On 2023-04-02 17:44:00 IST
திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள், போக்குவரத்து ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஊராட்சிகளின் வழியாக மீஞ்சூர் திருவள்ளவாயல் பேருந்துகளை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பொன்னேரி:

பொன்னேரி அருகே புதிய வழித் தடத்தில் பேருந்து சேவையை எம் எல் ஏக்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பொன்னேரி அரசு பேருந்து பணிமனையில் இருந்து டி 44புதிய வழித்தடங்களான தேவதானம், மெரட்டூர், கல்பாக்கம், வேளூர், ஆகிய ஊராட்சிகளின் வழியாக மீஞ்சூர் திருவள்ளவாயல் பேருந்துகளை இயக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் ஆகியோர் உத்தரவின் படி மேற்கண்ட பகுதிகளுக்கு புதிய பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. 

இப்பேருந்துகளை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகர், டிஜே கோவிந்தராஜன், மீஞ்சூர் சேர்மன் ரவி, ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் காணிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் டாக்டர் கா.சு. ஜெகதீசன் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகி கள் போக்குவரத்து ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News