உள்ளூர் செய்திகள்
மஞ்சூர் அருகே கெத்தையில் மண்சரிவு
- பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது.
- வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர், முள்ளி, வெள்ளியங்காடு மார்க்கமான கோவை மூன்றாவது மாற்று பாதை உள்ளது.
இவ்வழித்தடத்தில் கெத்தை ஏழாவது கொண்டை ஊசி வளைவில் நேற்று பெய்த பலத்த மழையால் சாலையில் மண் திட்டுகள் சரிந்தது. மேலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மஞ்சூரில் இருந்து கோவை சென்ற பேருந்தும் கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்த பேருந்துகளும் பள்ளி பேருந்து தனியார் வாகனங்கள் சுற்றுலா வாகனங்கள் என பல வாகனங்கள் மரம் மண் திட்டுக்கள் சாலையில் விழுந்ததால், அணிவகுத்து நின்றது.
நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் மண் திட்டுகளையும் மரத்தையும் அப்புறப்படுத்தினார்கள் பின்பு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.