உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே நிலத்தகராறு : தாய், மகளை கட்டையால் தாக்கிய உறவினர் கைது

Published On 2023-09-14 11:13 GMT   |   Update On 2023-09-14 11:13 GMT
  • இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
  • பிரியங்காவுக்கும், சுனந்தா வுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த அகரம் அருகே உள்ள கெம்பேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுனந்தா (வயது 44). இவர்களது மகள் பிரியங்கா (19). அதே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (37). இவரது மனைவி மஞ்சுளா (31). இவர்கள் பிரியங்காவின் உறவினர்கள் ஆவார்.

இருதரப்பினருக்கும் அதே பகுதியில் சொந்தமாக விவசாயம் நிலம் உள்ளது. இது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று பிரியங்காவும், அவரது தாயார் சுனந்தாவும், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த மஞ்சுநாத் அவர்களிடம் கேள்வி கேட்டதில், அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதன் காரணமாக, மஞ்சுநாத், பிரியங்காவையும், அவரது தாயாரையும், கைகள் மற்றும் மரக்கட்டைகளால் சரமாரியாக தாக்கி மிரட்டினார். இதன் காரணமாக, பிரியங்கா வுக்கும், சுனந்தா வுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்ைசக்காக அனுமதித்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுநாத்தை கைது செய்தனர். 

Tags:    

Similar News