உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி அருகே 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

Published On 2023-03-15 12:06 IST   |   Update On 2023-03-15 12:06:00 IST
  • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
  • மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேனி:

தேனி அருகில் உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர் மனைவி குருலட்சுமி(28). இவர்களுக்கு ஹரிபிரகாஷ்(12), ஜெசிந்தா(10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குருலட்சுமி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர் சமாதானம் செய்து மீண்டும் சங்கர் அழைத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே குருலட்சுமி குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

இதேபோல் தேனி கோட்டைக்களம் பகுதியை சேர்ந்த பாலாஜி மனைவி ஹேமலதா(28). இவர் தனியார் பிஸியோ கேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News