உள்ளூர் செய்திகள்

கால்வாய் நீரில் மூழ்கி கூலித்தொழிலாளி சாவு

Published On 2023-04-25 10:32 GMT   |   Update On 2023-04-25 10:32 GMT
  • வேலையை முடித்து விட்டு கல்வெட்டு பகுதியில் உள்ள பாலத்தின் மேல் தூங்கி கொண்டிருந்தார்.
  • தூக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பா தவறி பாலத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (வயது 50). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பேகேப்பள்ளி-தாகூர் சாலையில் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

வேலையை முடித்து விட்டு கல்வெட்டு பகுதியில் உள்ள பாலத்தின் மேல் தூங்கி கொண்டிருந்தார். பாலத்தின் அடியில் கால்வாயில் தண்ணீர் அதிகமாக ஓடி கொண்டிருந்தது. அப்போது தூக்கத்தில் இருந்த கிருஷ்ணப்பா தவறி பாலத்தில் இருந்த கால்வாயில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கிருஷ்ணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News