உள்ளூர் செய்திகள்

குளத்தில் மூழ்கி கூலிதொழிலாளி சாவு

Published On 2023-05-19 09:16 GMT   |   Update On 2023-05-19 09:16 GMT
  • கிரஸர் செல்லும் வழியில் உள்ள குளத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்றார்.
  • ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த நாகிரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வஜ்ராரெட்டி (வயது50).

கூலித்தொழிலாளியான இவர் நேற்று அன்னியாலம்-சீனிவாசா கிரஸர் செல்லும் வழியில் உள்ள குளத்தில் துணிகளை துவைப்பதற்காக சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வஜ்ரா ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News