உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலியான அப்துல் பாஷா 

கார் மரத்தில் மோதி கூலித்தொழிலாளி சாவு

Published On 2023-05-08 10:13 GMT   |   Update On 2023-05-08 10:13 GMT
  • பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது.
  • அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேட்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பாட்ஷ (வயது55).

கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 11 பேருடன் காரில் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு சென்றார்.

அப்போது அந்த கார் வேலூர்-கிருஷ்ணகிரி மாவட்டம் எல்லை பகுதியான பர்கூர் அருகே வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அப்துல் பாட்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் அப்துல் பாஷாவின் மனைவி வானா கவுசர் (45), அல்டாப் (22), அப்துல் பாஷா, பாத்திமா முனிஷா (55), முகமது அனிஷ் (30) உள்பட 10 பேரும் காயம் அடைந்தனர்.

அவர்களை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சாதாரண வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News