உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சின்னமனூர் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-10-09 04:54 GMT   |   Update On 2023-10-09 04:54 GMT
  • வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.
  • இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.

சின்னமனூர்:

சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது48). இவரது மனைவி கவுரி.குழு அமைத்து பலரிடம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த விஜயசாரதி விஷம் குடித்து மயங்கினார். சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News