உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2023-03-24 15:53 IST   |   Update On 2023-03-24 15:53:00 IST
  • மனைவி பல்லவி ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
  • மன விரக்தியடைந்த மகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தேர்நிலை தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது31). இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது.மேலும் அதிகளவில் கடன் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது மனைவி பல்லவி ஏன் இப்படி குடித்துவிட்டு வருகிறாய் என்று கேட்டதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன விரக்தியடைந்த மகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தள்ளார். உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News