உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2023-09-08 08:53 GMT   |   Update On 2023-09-08 08:53 GMT
  • விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
  • சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடையம்:

கடையம் அருகே உள்ள கோதாண்ட ராமபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. மாலையில் மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கப்பட்டது.

பின்னர் மகாகணபதி பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி , யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து 2-வது நாள் இரண்டாம் கால யாக பூஜை, மகாகணபதி பூஜை பின்னர் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News