உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம் நடந்தபோது எடுத்த படம்.

திசையன்விளை அருகே செங்கிடா காரசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-07-03 08:35 GMT   |   Update On 2023-07-03 08:35 GMT
  • விழா நாட்களில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை உள்பட 21 வகை பூஜைகள் நடந்தது.
  • இன்று காலை கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு செங்கிடா காரசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை தொடங்கி இன்று வரை 2 நாட்கள் நடந்தது. விழா நாட்களில் கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், கோ பூஜை உள்பட 21 வகை பூஜைகள் நடந்தது. இன்று காலை கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News