உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

கஜாரண்யேசுவரர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-03-28 09:31 GMT   |   Update On 2023-03-28 09:31 GMT
  • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
  • கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது,

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்பாள் சமேத கஜாரண்யேஸ்வரர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அமந்தாளம்மன் கோவில் (சப்தமாதா) ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

விழாவை யொட்டி கோவில்களின் அருகில் யாகசாலை அமைக்க ப்பட்டு காவிரியிலிருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஸ்திர ஹோமம், கோ பூஜை, தனபூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

3 கால யாகசாலை பூஜைகள் நிறைவேற்ற பட்டவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

காலையில் அமந்தாளம்மன் கோவில் குடமுழுக்கும், அதனை தொடர்ந்து லட்சுமி நாராயண பெருமாள் கோவில் குடமுழுக்கும், அடுத்ததாக காமாட்சி அம்பாள் சமேத கஜாரண்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.

தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் கோபிசெட்டிபாளையம் சிவகடாட்சதேசிக சாமிகள், கோவில் செயல் அலுவலர் சிவேந்திரராஜா மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, மாலை கஜாரண்யேஸ்வரர்- காமாட்சி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

பாதுகாப்பு ஏற்பா டுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

Similar News