உள்ளூர் செய்திகள்

முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டினர்.

திறனறி தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு

Published On 2022-12-21 10:06 GMT   |   Update On 2022-12-21 10:06 GMT
  • சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
  • 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம்.

வேதாரண்யம்:

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

அதில், நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் தென்னம்புலம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

இதனை, யாதவர் ஆலோசனை மையம் சார்பில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மாணவிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி திருவள்ளுவர் உருவம் பொறித்த கேடயம், திருக்குறள் புத்தகம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

இதில் யாதவர் ஆலோசனை மைய மாநில தலைவர் ஜம்புலிங்கம், மகளிர் பிரிவு ஜெயமீனாகுமாரி, சித்ரா, மாநில பொது செயலாளர் ராகவன், நாகை மாவட்ட அமைப்பாளர் வீரையன், மாவட்ட பொருளாளர் ராமநாதன், உறுப்பினர்கள் ராமமூர்த்தி துரை, ரவி, ஒன்றிய கவுன்சிலர் உஷாராணி, கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமரன், அஞ்சலக பணியாளர் சௌந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News