உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு பாராட்டு
- எந்தவித இடர்பாடும் இன்றி 7மாதங்களாக நடைபெறுகிறது.
- மையங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 100 சதவீதம் மாணவர் வருகைபுரிந்து வருகின்றனர்.
சீர்காழி:
"கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி, காவல்மான்யம், சேத்திருப்பு, அய்யம்பேட்டை அளக்குடி தெரு ஆகிய இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுடன் 100 சதவீதம் மாணவர் வருகைபுரிந்து வருகின்றனர். எந்தவித இடர்பாடும் இன்றி 7மாதங்களாக நடைபெறுகிறது.இதனிடையே கொள்ளி டம் பகுதிக்கு வருகை தந்த அரசு கொறடா கோவி.செழியன் இதனை அறிந்து நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும் தன்னார்வலர்கள் ஷர்மிலி, கீர்த்திகா, வர்ஷா, விசாலினி ஆகியோரையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் உடனிருந்தார்.