உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
கிருஷ்ணகிரி வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.
அதன் பின்னர் பூஜைகள் நடைபெற்று வந்தது. தற்போது கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்த நிலையில் நேற்று மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.
இதில், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.