உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய தேர்த்திருவிழா

Published On 2022-07-04 15:38 IST   |   Update On 2022-07-04 15:38:00 IST
  • 49-ம் ஆண்டு திருவிழா கொடியை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், தொடங்கி வைத்தார்.
  • நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில், பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், 49-ம் ஆண்டு தேர்த்திருவிழா கொடிஏற்றத்த்துடன் தொடங்கியது.

இதையொட்டி ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில், 49-ம் ஆண்டு திருவிழா கொடியை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், மத்திரித்து ஏற்றி வைத்தார்.

முன்னதாக ஆலயத்தில் பங்குத்தந்தை இசையாஸ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடக்கும் இத்தேர்த்திருவிழாவின் நிறைவு நாளில் வானவேடிக்கையுடன், பாத்திமா அன்னையின் தேர் பவனி நகர வீதிகளில் வலம் வர உள்ளது.

Tags:    

Similar News