உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
- 20 நிமிடங்கள் கண்களை கட்டிக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.
- நிர்வாகி ராஜேஷ்குமார் பள்ளியை பாராட்டி, இயக்குனர் புவியரசனிடம் கோப்பையை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாளந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி மாணவர்கள் 350 பேர் ஒன்றிணைந்து 20 நிமிடங்கள் கண்களை கட்டிக் கொண்டு, ஏ.பி.ஜே. உலக சாதனை அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.
ஏ.பி.ஜே. உலக சாதனை அமைப்பின் நிர்வாகி ராஜேஷ்குமார் பள்ளியை பாராட்டி, இயக்குனர் புவியரசனிடம் கோப்பையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகா ஆசிரியர் ரமேசிற்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சான்றி தழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏ.பி. அமைப்பு நிர்வாகி ராஜேஷ்குமார், பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீவரி, இயக்குனர்கள் கவுதமன், புவியரசன், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.