உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி தி.மு.க அலுவலகத்தில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா

Published On 2023-06-04 15:31 IST   |   Update On 2023-06-04 15:31:00 IST
  • கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
  • தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலலமை செயற்குழு உறுப்பினர் பரிதாநவாப், நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், நாகராஜ், சித்ரா சந்திரசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன் மற்றும் அன்பரசன், மதியழகன், நிர்வாகிகள் கடரலசுமூர்த்தி, திருமலைச்செல்வன், மோதிலால், டேம் பிரகாஷ், ஜமுனா புருஷோத்தமன், கேபிள் சரவணன், ராஜசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஒரிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News