உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 110 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்

Published On 2022-09-22 15:28 IST   |   Update On 2022-09-22 15:28:00 IST
  • 110 இடங்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது.
  • பொதுமக்களுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர், விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் 10 ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி பகுதிகள் மற்றும் அரசு பள்ளிகளில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் நடந்தது. கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவையால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாவட்ட முழுவதும் காய்ச்சல் சிறப்பு முகாம்ங்கள், ஊராட்சிகளில் ஒருங்கி ணைந்த தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கோவிந்தன் கூறுகையில், மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, மத்தூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், காவேரிப்பட்டணம், தளி ஆகிய 10 ஒன்றியங்களில் நேற்று 110 இடங்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, காய்ச்சல், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிலவேம்பு, கபசுர குடிநீர், விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

அத்துடன் ஊராட்சி நிர்வாகத்துடன், கிராம பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மை பணிகளும், கொசு, கொசு புழுக்கள் ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு உள்ளது. காய்ச்சல், சளி, இருமல், தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு சிகிச்சை பெறலாம்.

யாரும் அச்சப்பட தேவையில்லை. ஒவ்வொரு நாளும் மருத்துவ குழுவினர் 4 இடங்களில் முகாம் நடத்தி பரிசோதனைகள் மேற்கொண்டு வரு கின்றனர். மாவட்டத்தில் 11 நடமாடும் மருத்துவ குழுவினரும், 20 குழந்தைக ளுக்கான சிறப்பு குழுவும் அமைக்க ப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News