உள்ளூர் செய்திகள்

கே.என்.புதூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-06-23 15:45 IST   |   Update On 2025-06-23 15:45:00 IST
  • கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
  • வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், பொ.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, ரேகட அள்ளி, திப்பிரெட்டிஅள்ளி, பண்டார செட்டிபட்டி, வத்தல்மலை, சொரக்காப்பட்டி, வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி,

கே.என்.புதூர், கே.மோரூர், கண்ணப்பாடி ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சி.டி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News