உள்ளூர் செய்திகள்

டெம்போவில் கடத்தப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்.

குமாரபாளையத்தில் டெம்போவில் கடத்திய 1½ டன் ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-12-22 07:26 GMT   |   Update On 2022-12-22 07:26 GMT
  • சின்னப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றியவாறு டெம்போ வாகனம் ஒன்று வந்தது.
  • அதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்நிலையில் சின்னப்ப நாயக்கன்பாளை யம் பகுதியில் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றியவாறு டெம்போ வாகனம் ஒன்று வந்தது. அதனை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதன் டிரைவர் தப்பி சென்றார்.

இதையடுத்து குமாரபா ளையம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி டெம்போ வாகனம் மற்றும் அதில் இருந்த 1½ டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் துறை ஆர்.ஐ. பிரவீன் முன்னிலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி களிடம் ஒப்படைத்தார். டிரைவர் தப்பி ஓடியதால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News